Thursday, March 6, 2008
வாஞ்சிநாதன்
சமீபத்தில் நண்பர் இந்தியன் சாப்ளின் அவர்களின் வலைப்பூவில் வாஞ்சிநாதன் பற்றிய கட்டுரை படித்தேன். சுதந்திர போராட்ட தியாகியாக சொல்லப்பட்டுவரும் வாஞ்சிநாதனின் மற்றொரு முகத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். ஆஷ் துரையின் மரணம், சாதி வெறி பிடித்த காட்டு மிராண்டி மனிதர்களின் இழிவான வெற்றி என்பதை அதன் மூலம் உணர முடிந்தது. திருநெல்வேலி ஆட்சியாளராக பதவியேற்ற நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தியுள்ளார். தன்னுடைய அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும், ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும், குற்றால அருவியில் கடவுளும், கடவுளுக்கு அடுத்த படியாக பிராமிணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற மரபை உடைத்தெறிந்து விட்டு அனைத்து மக்களும் குளிக்கலாம் போன்ற உத்தரவுகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் அவற்றை முன்னின்று நடத்தியும்உள்ளார். இது போதாது அவரை கொலை செய்ய? உழைக்கும் மக்களை சுரண்டி, ஏமாற்றி தின்று திண்ணைகளில் தூங்கியும், பொழுது போகாத பிராமின இளைஞர்கள், ஆஷ் துரையை எதிர்ப்பதர்க்காக உருவாக்கிய சங்கம் தான் "பாரத மாதா சங்கம் " தலைமை வாஞ்சிநாதன். இதற்கெல்லாம் சிகரம் வைத்த சம்பவம் ஒரு அருந்திய பெண்ணை, பிரசவத்தின் போது அக்கிரகாரத்தின் வழியே மருத்துவ மனைக்கு செல்ல அனுமதிக்காதது தான். அந்த வழியே வந்த ஆஷ் துரையும் அவரது மனைவியும் தங்கள்வண்டியிலேயே பிராமிணர் தெரு வழியே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த செயல் மூலம் வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற பிராமின இளைஞர்கள் ஆஷ் துரையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து வாஞ்சிநாதன் கடிதம் ஒன்றையும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் அருந்திய பெண்ணை அக்கிரகாரத்தின் வழியே அனுப்பியதன் மூலம் இந்து மதத்திற்கு தீங்கு விழைவித்ததாகவும், இந்து மதத்தின் சானாதன தர்மத்தை, மாமிசம் உண்ணும் மிலேச்சனான வெள்ளைக்கார ஆஷ் துரை கெடுத்துள்ளதால் அவரை கொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (இது அந்த கடிதத்தின் சுருக்கம் தான்) . இதன் பொருட்டே ஆஷ் துரை மணியாட்சி ரயில் நிலையத்தில் வாஞசிநாதனால் சுட்டு கொல்ல பட்டார். வீரன் (என்று சொல்லப்படும் ) வாஞ்சிநாதன் அவர்களும் தன்னை தானே சுட்டு கொண்டார். ஒரு ஆங்கிலேயனை சுட்டு கொன்ற ஒரே காரணத்தினால் தியாகி பட்டம் கிடைத்து விட்டது. உண்மையில் தீண்டாமை எதிர்ப்பு போரில் இறந்து போனதற்கு நாம் ஆஷ் துறைக்கு தான் அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த கட்டுரை படித்து முடிக்கும் போது எனக்கு தோன்றியது " அக்கிராகரங்கள் இருக்கும் வரை அக்கிரமங்கள் தீராது என்பது தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment