Thursday, March 6, 2008
இன்றும் தொடரும் ஆதிக்கம்
இன்று காலை மாம்பலம் ரயில் நிலையத்தில் நான் கண்ட சம்பவம். ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பெஞ்சில் அமர்ந்து இருந்தார். அவர் ஏதாவதொரு அலுவலகத்தில் கடை நிலை பணியாளராக இருக்க வேண்டும் என்று நான் யூகித்தேன். பின்னர் அது உண்மை என நான் தெரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவர் (குறிப்பு: நெற்றியில் சிகப்பு நிற கோட்டை அணிந்து இருந்தார்) அந்த பெரியவரை பெயர் சொல்லி (சண்முகம்) அழைத்தப்படி வந்தார். அந்த இளைஞர் அவருடைய மேலதிகாரி இருக்க வேண்டும். இந்த வாரம் ஞாயிற்று கிழைமை (நேற்று) நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பபார்த்தேன். ஏன் வரவில்லை? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர் வேறு வேலைகள் இருந்ததால் வர முடியவில்லை என்று பதிலளித்தார். இதற்கிடையில் பெரியவரிடம் ஒரு கவர் ஒன்றை கொடுத்தார். அந்த நேரத்தில் மின் தொடர் வண்டி வர, அடுத்த வாரம் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒரு உத்தரவை போல சொல்லி விட்டு போனார். அவர் அந்த பக்கம் போனதும், அருகிலிருந்த என்னிடம் அந்த பெரியவர் திரும்பி, சலிப்புடன் ஞாயிற்று கிழைமை கூட வேலை செய்தாக வேண்டும். அதும் ஆபீஸ் வேலை என்றால் கூட பரவாயில்லை, அவருடைய வீட்டில் உள்ள காரை கழுவுவது, அவருடைய குழந்தைகளை விளையாட அழைத்து சென்று, அழைத்து வருவது போன்ற வேலைகளை விடுமுறை நாட்களில் செய்யவேண்டும். மறுத்தாலோ அல்லது போகாமல் இருந்தாலோ அலுவல நாட்களில் வேணுமென்றே அலுவலகத்தை சரியான நேரத்தில் பூட்ட விடாமல், நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு புறப்பட்டு செல்வார். இந்த நேரத்தில் ஆபீஸ் வேலையை பார்ப்பாரா என்றால் அதுவும் கிடையாது. கம்ப்யூட்டரில் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய அண்ணனோடு அல்லது அக்காவோடு பேசிக் கொண்டிருப்பார். இவ்வளோ சீக்கிரம் போய் என்ன செய்வார்?னு நினைக்கிறீங்க. பேகில் வைத்திருக்கும் புக்ஸ் எல்லாத்தையும் உக்காந்து படிப்பார். அப்புறம் தான் ஆபீஸ் வேலை. பேசிக்கொண்டு போனவரிடம் நான் இடை மறித்து, நீங்க ஆபிஸ் போகலியா? என்று கேட்டேன். அவருடைய வீட்டிற்கு இன்று கரண்ட் பில் கட்ட சொல்லி இருந்தார். அதனால் தான் இங்க வந்து அவருக்காக காத்திருக்கேன். அந்த நேரத்தில் நான் செல்வதற்கான மின் தொடர் வண்டி வந்ததால், அவரிடம் நான் விடை பெற்றேன் . பயணத்தின் போது இந்த நிகழ்ச்சி குறித்தே என் மனம் சிந்தித்து வந்தது. காலங்காலமாக ஏதோவொரு வகையில் ஒரு பகுதி மக்களை, இன்னொரு பகுதி மக்கள் அடிமைகளாக நடத்திக்கொண்டு வருகிறார்கள். பணக்காரன் ஏழையை, முதலாளி தொழிலாளியை என உலகத்தின் ஒரு பகுதியின் மீது ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. பாரதிதாசன் எழுதியதை போல் ஓடப்பரெல்லாம் உதையப்பர் ஆனால் மட்டுமே இந்த இழிநிலையிலிருந்து சமூகம் தன்னை தானே காத்து கொள்ள முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment